மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, March 19, 2017

- மகாகவி பாரதியார் - வசனக் கவிதை - ஞாயிறு

வசனக் கவிதை
- ஞாயிறு

மகாகவியின் வசனக் கவிதைகள் மிகவும் ரசனையானவை. ஞாயிறு என்ற தலைப்பில் உள்ள இந்தக் கவிதை , சூரியனை நோக்கி வினா தொடுக்கும் . எல்லா வினாக்களுக்கும் ஒரே பதில் ஆம் என்பது தான் . ஆனால் கேட்கப்படும் கேள்விகள் சுவையானவை ,
இருளுக்கும் உனக்கும் உள்ள உறவென்ன ? என்பதை சொல் என ஞாயிறிடம் கேட்கும் அன்பான விசாரிப்பு இது.
கவிதை ரசனையை யாரும் சொல்லுவதால் உணர முடியாது. திரும்ப திரும்ப படித்தால் நீங்களே உணர்வீர்கள்

ஞாயிறே இருளை
என்ன செய்துவிட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா?
விழுங்கி விட்டாயா?
கட்டி முத்தமிட்டு
நின் கதிர்களாகிய கைகளால்
மறைத்து விட்டாயா?  
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப் பொருளா?
அது நின் காதலியா?
இரவெல்லாம் நின்னைக்
காணாத மயக்கத்தால்
இருண்டிருந்ததா?
நின்னைக் கண்டவுடன்
நின்னொளி தானுங்கொண்டு
நின்னைக் கலந்துவிட்டதா?
நீங்கள் இருவரும்
ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா?
முன்னும் பின்னுமாக
வந்து உலகத்தைக் காக்கும்படி
உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா?
உங்களுக்கு மரண மில்லையா?
 நீங்கள் அமுதமா?
உங்களைப் புகழ்கின்றேன்,ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்

- மகாகவி  பாரதியார் 

மகாகவி பாரதியாரின் வசனக் கவிதை - இன்பம்

வசனக் கவிதை
- இன்பம்


மகாகவி பாரதியின் வசனக் கவிதை இன்பம் 

இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான்
இனிமை யுடைத்து;

காற்றும் இனிது.

தீ இனிது.
நீர் இனிது.
நிலம் இனிது.

ஞாயிறு நன்று;

திங்களும் நன்று.
வானத்துச் சுடர்கள்
எல்லாம் மிக இனியன.
மழை இனிது.
மின்னல் இனிது.
இடி இனிது.

கடல் இனிது,

மலை இனிது
காடு நன்று.  
ஆறுகள் இனியன.
உலோகமும்,மரமும்,
செடியும், கொடியும்,
மலரும்,காயும்,
கனியும் இனியன.

பறவைகள் இனிய.

ஊர்வனவும் நல்லன.
விலங்குகள் எல்லாம்
இனியவை; நீர்
வாழ்வனவும் நல்லன.

மனிதர் மிகவும் இனியர்.

ஆண் நன்று.
பெண் இனிது.
குழந்தை இன்பம்.
இளமை இனிது.
முதுமை நன்று.

உயிர் நன்று.

சாதல் இனிது.
- மகாகவி

பாரதியார்  

Saturday, March 18, 2017

அன்பு குறித்து மாககவி பாரதி -3

அன்பு குறித்து மாககவி பாரதி 

ன்பு  மிகுந்த தெய்வமுண்டு -துன்பம்

அத்தனையும்  போக்கிவிடும்  பாப்பா!

மகாகவி பாரதியார் அன்பு குறித்து -2

மகாகவி பாரதி அன்பு குறித்து

"துன்ப நினைவுகளும் 
சோர்வும் பயமும் எல்லாம் 
அன்பில் அழியுமடி கிளியே 
அன்பிற்கு அழிவில்லை"


மகாகவி பாரதியார் அன்பு குறித்து - 1

மகாகவி பாரதி    அன்பு குறித்து


"வேட்டை அடிப்பது வில்லாலே 
அன்புக்கோட்டை பிடிப்பது சொல்ல்லாலே "


மகாகவி பாரதியார் அன்பு குறித்து


மகாகவி பாரதி அன்பு குறித்து

மனிதகுலம் தழைத்து ஓங்குவது அன்பில்தான் .மனிதநேயத்தில் தான் அன்பு பிறக்கிறது. அன்பு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ ஒழிந்து போயிருக்கும் மனித இனம் .பாரதி இதை நன்கு உணர்ந்தவன்.அன்பைப் போதிப்பதில் நிகரற்ற கவிஞனாக இருந்தான் .
சக மனிதர்களிடமட்டுமின்றிகாக்கைகுருவி களிடமும்அன்புகாட்டியவன்.

"
அன்பிற் சிறந்த தவமில்லை

அன்புடையார்  இன்புற்று வாழ்தல் இயல்பு "

"அன்பு தன்னில் செழிக்கும் வையம்"

"அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனைபேரும் நிகராம்” .

"வேட்டை அடிப்பது வில்லாலே அன்புக்கோட்டை பிடிப்பது சொல்ல்லாலே "

"துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடி கிளியே அன்பிற்கு அழிவில்லை"

"உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் "

பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்  விளங்குக!

“பகை நடுவினில்  அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!

“அன்பு  மிகுந்த தெய்வமுண்டு -துன்பம்
அத்தனையும்  போக்கிவிடும்  பாப்பா!

“அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்”

“அன்பு கனிந்த கனிவே சக்தி,

“சங்கரன் அன்புத் தழலே சக்தி”

பாட்டினில் அன்பு செய்.

“அன்பு  வாழ்க என்று அமைதியில்  ஆடுவோம்.

“அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  நல்லது தீயது நாமறியோம்”

என அன்பு பற்றி பறைசற்றியவன் பாரதி .

Monday, March 13, 2017

False promises , sweet lies, money and muscle power work well in elections


On ignominious treatment of Irom Chanu Sharmila  in the hustings 

It pained me to see that  Ms Irom Sharmila who was on 17-year fast demanding repeal of AFSPA contested election in Manipur and got only 90 votes.Voters are not recognizing those who sacrifice their life for the cause of people. She lost her youth in her 17 year fast.Voters get enchanted towards those who give false promises and sweet lies. Money and muscle power work well in election. Pelf and fiefdom rule the roost.She inspired me a lot. But she lost in the mired abyss of politics.




Irom Chanu Sharmila - An inglorious defeat for Indian Voters .

நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் -7

கண்ணிலாக் குழந்தைகள் போல் -பிறர் 

      காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்

.....மகாகவி பாரதியார்

நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் -6

கஞ்சி குடிப்பதற் கிலார் -அதன் 

      காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார். 


.....மகாகவி பாரதியார்

நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்- 5

தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -தமைச் 

      சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;

.....மகாகவி பாரதியார்

நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் - 4

கொஞ்சமோ பிரிவினைகள்? -ஒரு 

      கோடி என்றால் அது பெரிதாமோ? 

.....மகாகவி பாரதியார்


நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் - 3



எப்போதும் கைகட்டுவார் -இவர் 

      யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார்.... 
.....மகாகவி பாரதியார்


நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் -2



மந்திரவாதி என்பார் -சொன்ன 

      மாத்திரத்திலே மனக்கிலி பிடிப்பார்

-----  மகாகவி பாரதியார் 




நெஞ்சு பொறுக்குதிலையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் - 1


அஞ்சி அஞ்சிச் சாவார் -இவர் 

      அஞ்சாத பொருளில்லை அவனியிலே
-----  மகாகவி பாரதியார் 



நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட வாக்காளர்களை நினைத்தால்

 நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட வாக்காளர்களை நினைத்தால் 

ஐரோம் சானு ஷர்மிளா  மணிப்பூர் மக்களின் மனித உரிமைகளுக்காக 17  ஆண்டு காலம் உண்ணாவிரதம் இருந்தார் . மணிப்பூர் மக்களை கொடுமைக்கு உள்ளாக்கும் சட்டம் அகற்றப் படவேண்டும் என்பதற்காக  17 ஆண்டு உண்ணாவிரத மிருந்து  தன இளமைக்காலம் முழுவதையும் தொலைத்தார் . 

அவர் தேர்தலில் நின்றபோது எந்த மக்களுக்காக போராடினாரோ  அவர்கள் போட்ட ஒட்டு மொத்தம்  90  தான் .தியாகத்திற்கு மதிப்பிலாமல் போய்விட்டது . பலம் , பணம்  காசு அடியாள்   ஜாதி மதம்  போன்றவை தான்   தேர்தலில் ஜெயிக்கும் தகுதி  என்றால் யாரை நோவது எனப்  புரியவில்லை .

 மகாகவிபாரதி தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை கண்டு மனம் வெம்பி பாடிய பாடல் "நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட மனிதர்களை நினைத்தால்" . அப்பாடலை  படித்த  உடன் எனக்கு தெளிவு பிறந்து விட்டது    அப்பாடல்கள் வரிகளை படங்களாய் தந்துள்ளேன்

Saturday, March 11, 2017

மகாகவி பாரதியின் காளிப் பாட்டு


யாதுமாகி நின்றாய்  காளி எங்கும் நீ நிறைந்தாய் 
--- மகாகவி பாரதி 


மகாகவி பாரதி -- வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ



வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ
--- மகாகவி பாரதியார் 

Sunday, December 11, 2016

இன்று மகாகவி பாரதி பிறந்த நாள்

இன்று மகாகவி பாரதி பிறந்த நாள்


தமிழ் தாய்க்கு கிடைத்த வரம் மகாகவி. மீளாத்துயிலில் கிடந்த தமிழகத்தை தட்டி எழுப்பியவன். தமிழுக்கு  புது ரத்தம் பாய்ச்சி புத்துணர்வும் புது மலர்ச்சியும் தந்த மருத்துவன் .தன்னிலை கண்டு தவித்த தமிழன்னையின் ஏக்கம் பாரதி பிறந்த அன்று தான் தணிந்தது .வராது வந்த மாமணியாம் பாரதி தமிழர்க்கு தந்த கவிதைகளும் அவனது சிந்தனை செல்வங்களும் தமிழ் மண்ணில் காலம் காலமாய் வாழும். பாரதியைப் படிப்போம் . தமிழ் உணர்வு பெறுவோம்.

பாரதி வெறும் கவிஞன் மட்டுமல்ல .பன்முகத்  தன்மை கொண்டவன்

தேச  விடுதலைக்கான போராளி..
தன் கவிதைகளை விடுதலைப் போராட்ட ஆயுதமாக்கியவன் . அவனது கவிதைக் கனலில் தெறித்த நெருப்புக்கு பயந்தது ஆங்கில ஏகாதிபத்தியம்."எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு,. நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு" என நம்பிக்கை தந்து அடிமைப்பட்ட மக்களின் அச்சம் போக்கியவன்.

தமிழ் பற்றாளன்
தமிழ் மீது அளப்பரிய காதல் கொண்டவன், “எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி”* என மார்தட்டித் திரிந்தவன்" . அவன் ஆங்கிலம் ஹிந்தி சமஸ்கிருதம் என பல மொழிகள் தெரிந்தவன் . எனவே “ தான் நாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என பெருமை பொங்க உரக்க முழக்கமிடுகிறான் , தமிழின்  பெருமையை உணரவைத்து அதன் மீது  தமிழர்க்கு தமிழ் மீது பற்று ஊட்டியவன் .”சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா” என பிஞ்சு நெஞ்சிலே தமிழ் உணர்வைப்  பதியம் போட்டவன்.

 சிறந்த பத்திரிக்கையாளன்
 . சுதேசமித்திரனில் துணை ஆசிரியர். சக்கரவர்த்தினியின் பொறுப்பாசிரியர். இந்தியா வார இதழின்  ஆசிரியர் ,விஜய நாளேட்டின் ஆசிரியர் . சூரியோதயம் வார இதழின் ஆசிரியர் . பாலபாரதம் என்ற ஆங்கில இதழின் ஆசிரியன். இப் பத்திரிக்கைகளில் வந்த அவனது எழுத்துக்கள் தமிழர்களிடம் விழிப்புணர்வு அலைகளை  உண்டாக்கின. அரசியல் கேலிச் சித்திரத்தை தமிழில் முதன் முதலாக அறிமுகம் செய்தவன் அவன்  

சமுக சமத்துவத்திற்க்கான போராளி
தன் பாட்டுத் திறத்தாலே உலகை பாலிக்க நினைத்த பேராசைக்காரன் .மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வு  நிலையை  ஒழித்திட  சமரசமற்ற நிலை கொண்டிருந்தான் ."சாதி இரண்டொழிய வேறில்லை என்ற தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தென்போம்" "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" "இல்லை என்ற சொல்லை உலகில் இல்லையாக வைப்பேன்" என்கிறான் .   

பெண்ணுரிமை  போராளி
அவன் வாழ்த்த காலத்தில் பெண்களை படிக்க வைப்பதும் சமமாக நடத்துவதும் கனவினிலும் நடக்காத ஒன்றாய் இருந்தது . 
"பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை ஆற்றிடும் காணீர்" "ஆணும் பேணும் சமமெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையகம் தழைக்குமாம்" என்கிறான் .
உடலின் இருகண்களை  எவ்வாறு பேதமின்றி  பார்க்கிறோமோ அது போலவே அண்களும் பெண்களும் சமமாக பார்க்கப்பட வேண்டும் என்பதை  " கண்களில் ஒன்றினைக் குத்தி காட்சி கெடுத்திடலாமோ" என்கிறான் பாரதி 

தமிழுக்கு  முதல் சிறுகதை தந்தவன்
மேற்கத்திய நாடுகளிலும் அமெரிக்க கண்டத்திலும் சிறுகதைகள் வளர்ச்சி பெற்றிருந்த நிலையில் தமிழில் சிறுகதை போக்கு காணப் படவில்லை .
*சக்கரவர்த்தினி பத்திரிக்கையில்  1905ல் பாரதி எழுதிய *துளசிபாய் என்ற சிறுகதை தான் தமிழ் மொழியில் வந்த முதல் சிறுகதை* என அறியப்படுகிறது . எனவே அவன் தான் தமிழ் சிறுகதை முன்னோடி.

புதுக்கவிதைக்கு தடம் பதித்து தந்தவன்
மரபுக்கவிதை எழுதுவதே வாடிக்கையாக் கொண்டிருந்தனர் தமிழ் கவிஞர்கள்.அவனது வசனக் கவிதைகளே புதுக் கவிதைக்கு மடை மாற்றும்  ஆகர்ச சக்தியாக அவர்களுக்கு விளங்கின.. அதில் ஈர்க்கப்பட்ட கவிஞர்கள் பலரும் புதுகவிதைக்கு மாறினார் .

சிறந்த கட்டுரையாளன்
.பாரதியின் கட்டுரைத் தொகுப்புகள் தமிழுக்கு கிடைத்த வரம். அக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் மீது தயவு தாட்சண்யமின்றி  விர்சம்சனம் செய்து தன்னுடைய கருத்தை  பதிவு செய்திருக்கிறான் . சமூக ,அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகள்   உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அவற்றை ஆராய்ந்து  படித்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தான்.

இளைஞர்கள் பாரதியை படிக்கவேண்டும். குழந்தைகளுக்கு அவனை அறிமுகம் செய்ய வேண்டும். தமிழ் மொழி மீதான உணர்வை  அவர்களிடம் நெறிப்படுத்தும் . மொழி உணர்வு பெறுவோம். பாரதி புகழ் ஓங்கட்டும்