மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, February 15, 2013

மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி 'அ ; வரிசை

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊன் மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை

** ஈகை - ஏழைகளுக்குத்  தருவதே ஈகை;
** ஏறு - ஆண் சிங்கம்
** ஔடதம் - மருந்து