மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Saturday, March 18, 2017

மகாகவி பாரதியார் அன்பு குறித்து


மகாகவி பாரதி அன்பு குறித்து

மனிதகுலம் தழைத்து ஓங்குவது அன்பில்தான் .மனிதநேயத்தில் தான் அன்பு பிறக்கிறது. அன்பு மட்டும் இல்லாதிருந்தால் எப்போதோ ஒழிந்து போயிருக்கும் மனித இனம் .பாரதி இதை நன்கு உணர்ந்தவன்.அன்பைப் போதிப்பதில் நிகரற்ற கவிஞனாக இருந்தான் .
சக மனிதர்களிடமட்டுமின்றிகாக்கைகுருவி களிடமும்அன்புகாட்டியவன்.

"
அன்பிற் சிறந்த தவமில்லை

அன்புடையார்  இன்புற்று வாழ்தல் இயல்பு "

"அன்பு தன்னில் செழிக்கும் வையம்"

"அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனைபேரும் நிகராம்” .

"வேட்டை அடிப்பது வில்லாலே அன்புக்கோட்டை பிடிப்பது சொல்ல்லாலே "

"துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடி கிளியே அன்பிற்கு அழிவில்லை"

"உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் "

பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்  விளங்குக!

“பகை நடுவினில்  அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!

“அன்பு  மிகுந்த தெய்வமுண்டு -துன்பம்
அத்தனையும்  போக்கிவிடும்  பாப்பா!

“அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்”

“அன்பு கனிந்த கனிவே சக்தி,

“சங்கரன் அன்புத் தழலே சக்தி”

பாட்டினில் அன்பு செய்.

“அன்பு  வாழ்க என்று அமைதியில்  ஆடுவோம்.

“அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  நல்லது தீயது நாமறியோம்”

என அன்பு பற்றி பறைசற்றியவன் பாரதி .

No comments:

Post a Comment