மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, March 13, 2017

நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட வாக்காளர்களை நினைத்தால்

 நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட வாக்காளர்களை நினைத்தால் 

ஐரோம் சானு ஷர்மிளா  மணிப்பூர் மக்களின் மனித உரிமைகளுக்காக 17  ஆண்டு காலம் உண்ணாவிரதம் இருந்தார் . மணிப்பூர் மக்களை கொடுமைக்கு உள்ளாக்கும் சட்டம் அகற்றப் படவேண்டும் என்பதற்காக  17 ஆண்டு உண்ணாவிரத மிருந்து  தன இளமைக்காலம் முழுவதையும் தொலைத்தார் . 

அவர் தேர்தலில் நின்றபோது எந்த மக்களுக்காக போராடினாரோ  அவர்கள் போட்ட ஒட்டு மொத்தம்  90  தான் .தியாகத்திற்கு மதிப்பிலாமல் போய்விட்டது . பலம் , பணம்  காசு அடியாள்   ஜாதி மதம்  போன்றவை தான்   தேர்தலில் ஜெயிக்கும் தகுதி  என்றால் யாரை நோவது எனப்  புரியவில்லை .

 மகாகவிபாரதி தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை கண்டு மனம் வெம்பி பாடிய பாடல் "நெஞ்சு பொறுக்குதில்லையே நிலை கெட்ட மனிதர்களை நினைத்தால்" . அப்பாடலை  படித்த  உடன் எனக்கு தெளிவு பிறந்து விட்டது    அப்பாடல்கள் வரிகளை படங்களாய் தந்துள்ளேன்

No comments:

Post a Comment