மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, July 14, 2022

கண்ணம்மா என் குலதெய்வம் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா


பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்  தின்னத்தகாது என்று  
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!                   

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!

தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு 
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்     
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!                                      

துன்ப ம் இனியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!
நல்லது தீயது  நாம் அறியோம் அன்னை
நல்லது  நாட்டுக! தீமையை  ஓட்டுக! 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!

No comments:

Post a Comment