மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, July 13, 2022

கண்ணம்மா என் காதலி 1/6


மகாகவி பாரதி கண்ணனை காதலியாகக் கருதி எழுதிய ஆறு பாடல்களில் முதல் பாடல் இது.

சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடு நிசியில் – தெரியும்
நட்சத்திரங்களடீ!

சோலை மலர் ஒளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – உனது
நெஞ்சில் அலைகளடீ!
கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ!
வாலைக் குமரியடீ, – கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய், – கண்ணம்மா!
சாத்திரம்  ஏதுக்கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, – கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ? – இதுபார்,
கன்னத்து முத்த மொன்று


No comments:

Post a Comment