மகாகவியின் கவித்துவமான வரிகள்
Tuesday, May 05, 2015
Sunday, January 25, 2015
Sunday, January 18, 2015
English rendition of Mahakavi Bharathiyar song in an image file
Thursday, January 15, 2015
Tuesday, March 18, 2014
Thursday, March 13, 2014
கனல் சிந்தும் கண்கள்
பாரதியின் கவிதைகள் படங்களாக .
கவிஞனின் கண்கள் கனலை சிந்துவது போல் உள்ள இப்படத்தில்
சமூக அநீதிக்கு எதிரான ஓர் கலகக்காரனின் ஆக்ரோஷம்
அவனது விழிகளில் வழிகிறது .ஓவியரின் கைவண்ணத்தின்
திறன் அது.
அநீதி கண்டு பொங்கி எழுந்து " ரௌத்திரம் பழகு" எனச்
சொன்னவன் அல்லவா ! கவிஞன் மகாகவி பாரதி .
![]() |
| Mahakavi Bharathiyar song in image format |
![]() |
| Mahakavi Bharathiyar song on caste in image format |
Tuesday, March 04, 2014
Wednesday, February 19, 2014
Makakavi Bharathiyar songs in image form
மகாகவி பாரதியார் பாடல்கள் ...படங்களாக ..பெண் விடுதலை குறித்து
தேசம் விடுதலை பெற்றால் எப்படியெல்லாம் நாங்கள் வாழ்வோம் எனத் தெரியுமா? என்ற கேள்விக்கு விடை தரும் பாடல் தான் "விடுதலை " என்ற தலைப்பில் அவர் எழுதியது .அவரது கனவு நனவானதா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி ! சுதந்திர இந்தியாவில் மாதர்களை இழிவு செய்யும் மடமைப் போக்கு கூடிக் கொண்டு தானே இருக்கிறது .
![]() |
| பெண் விடுதலை குறித்து மகாகவி பாரதியார் |
Tuesday, February 18, 2014
Mahakavi Bharathiyar songs in images
மகாகவி பாரதியார் பாடல்கள் ..படங்களாக
மகாகவி பாரதியார் தனது பாப்பா பாடலில் எழுதிய வரிகள் இவை .
உண்மை தான் தெய்வம் என்று எப்போதும் சொல்லிவரும் பாரதி குழந்தைகளுக்கு இக்கருத்தை இவ்வரிகளில் வலியுறுத்துகிறார் . எல்லா உயிர்களிடத்தும் எவ்வித வித்தியாசம் காட்டாமல் அன்பு செலுத்த வேண்டும் என அவர்களை கேட்கிறார் .எவ்வித கஷ்ட நஷ்டங்களை தங்கும் வலிமையான நெஞ்சம் உங்களுக்கு இருக்க வேண்டும் என அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்
![]() |
| பாப்பா பாடல் வரிகள் |
Saturday, February 08, 2014
Heart rendering one minute Telugu short film
Th is is one minute short film about how one's destiny is changed by his decision. "Helping others brings happiness" we know.Sometimes It will save one's life.Perhaps its inspiration came from the " Butterfly Effect" which explains a small change may result in a larger difference. Many films came on this subject. But this one minute short film is making us ponder over a long time .
Click the link below and see
one minute short film
Click the link below and see
one minute short film
Tuesday, November 19, 2013
பெண்கள் விடுதலைக் கும்மி
பெண்கள் விடுதலைக் கும்மி
காப்பு
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.
கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.(கும்மி)
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.(கும்மி)
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி!(கும்மி)
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி!(கும்மி)
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.(கும்மி)
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.(கும்மி)
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.(கும்மி)
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.(கும்மி)
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி!(கும்மி)
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி!(கும்மி)
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம்.(கும்மி)
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம்.(கும்மி)
காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!(கும்மி)
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!(கும்மி)
Sunday, September 29, 2013
Sunday, September 01, 2013
![]() |
| Bharathi on Truth |
Mahakavi Bharathi's poem on Truth.
Humanity is one.
Those who find truth will get the bliss.
The fallen today will rise up tomorrow
The risen up will end in destruction.
Truth's other name is God.
Other Gods we worship are untruth.
Let us profess "Truth is Veda".
Others are mere stories.
Humanity is one.
Those who find truth will get the bliss.
The fallen today will rise up tomorrow
The risen up will end in destruction.
Truth's other name is God.
Other Gods we worship are untruth.
Let us profess "Truth is Veda".
Others are mere stories.
Friday, April 05, 2013
பாரதி ஆத்திசூடி" ஞ" வரிசை
ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞமிறென இன்புறு
ஞேயம் காத்தல் செய்
ஞமலி-நாய்
ஞாயிறு-சூரியன்
ஞமிறு-வண்டு
ஞேயம்-நேசம்,
--------------------------
ஞாயிறு போற்று
ஞமிறென இன்புறு
ஞேயம் காத்தல் செய்
ஞமலி-நாய்
ஞாயிறு-சூரியன்
ஞமிறு-வண்டு
ஞேயம்-நேசம்,
--------------------------
Thursday, April 04, 2013
பாரதியின் புதிய ஆத்திசூடி க வரிசை
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கிளை பல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல் கை கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
காலம் அழியேல்
கிளை பல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல் கை கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
--------------------------
Sunday, March 31, 2013
மகாகவி பாரதியரர் கவிதைகள்
மகாகவி பாரதியரர் கவிதைகள் முழுவதையும் Word Document ல் யுனிகோடில் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்க்கை சொடுக்கவும்
https://docs.google.com/ document/d/ 1en73UlRSPz2fbw3p2dZ7IG7bUESvx qv1eby0_SXwTdo/edit?usp= sharing
https://docs.google.com/
Sunday, March 17, 2013
படித்து ரசித்த கவிதை
சாலைகள் இப்போது
குண்டும் குழியுமாய் ....
ஒப்பனை கலைக்கப்பட்ட
நடிகைகள் மாதிரி
காண்ட்ராக்டர்களின
கதை சொல்கின்றன..
மு. மேத்தா
--------------------------
குண்டும் குழியுமாய் ....
ஒப்பனை கலைக்கப்பட்ட
நடிகைகள் மாதிரி
காண்ட்ராக்டர்களின
கதை சொல்கின்றன..
மு. மேத்தா
--------------------------
மு. மேத்தா கவிதை
ஓட்டப் பந்தயத்தில் என்னை
ஓடச் சொல்லிவிட்டு நீங்கள்
ஏன் என்னுடைய தோள்களைப்
பிடித்து தொங்குகிறீர்கள்...?
பொய்யே தேசத்தின்
பொது மொழியாய் மாறியது!
இவ்வுலகில் காணும்
துயர்க்கெல்லாம் காரணத்தை
நான் அறிவேன்.
பொருளாதாரத்தில் பொதுவுடமை
வாராமல் சூரியனின் வெளிச்சமும்
சரியாக விநியோகமாகாது.
மு. மேத்தா
--------------------------
ஓடச் சொல்லிவிட்டு நீங்கள்
ஏன் என்னுடைய தோள்களைப்
பிடித்து தொங்குகிறீர்கள்...?
பொய்யே தேசத்தின்
பொது மொழியாய் மாறியது!
இவ்வுலகில் காணும்
துயர்க்கெல்லாம் காரணத்தை
நான் அறிவேன்.
பொருளாதாரத்தில் பொதுவுடமை
வாராமல் சூரியனின் வெளிச்சமும்
சரியாக விநியோகமாகாது.
மு. மேத்தா
--------------------------
Subscribe to:
Posts (Atom)


































