மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, June 27, 2019

தனிப் பாடல்கள்-அந்திப் பொழுது-மகாகவி பாரதியார்- Bharathiyar Quotes songs


தனிப் பாடல்கள்-அந்திப் பொழுது1/2


செவ்விது ,செவ்விதுபெண்மை!
செவ்வொளி வானில் மறைந்தே- இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை இதழ்நகை வீச, -விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள் .
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்!
                            ......மகாகவி பாரதியார்

குறிப்பு

கோணம் : அங்குசம்






தனிப் பாடல்கள்-அந்திப் பொழுது1/2

காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
காதலினால்  உயிர்  தோன்றும்;-இங்கு
காதலினால்  உயிர்  வீரத்தில் ஏறும் ;
காதலினால் அறிவு எய்தும் -இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலினால் அவள் கையைப் -பற்றி
அற்புதம் என்று இரு  கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோர்  பாட்டிசைத் திட்டாள்.
                                     ......மகாகவி பாரதியார்







No comments:

Post a Comment