மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, June 27, 2019

தனிப் பாடல்கள் -நிலாவும் வான்மீனும் காற்றும் (மனத்தை வாழ்த்துதல்) -.... மகாகவி பாரதியார்


Bharathiyar Quotes Songs 

தனிப் பாடல்கள் -நிலாவும் வான்மீனும் காற்றும்

(மனத்தை வாழ்த்துதல்)

உலாவும் மனச்சிறு புள்
 நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!
..... மகாகவி  பாரதியார் 





No comments:

Post a Comment