மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, June 27, 2019

தனிப் பாடல்கள்- சந்திரமதி -மகாகவி பாரதியார் - Bharathiyar Songs Quotes




        தனிப் பாடல்கள்-  சந்திரமதி 1/3


இருவிழிக்குத் தே நிலவு;
பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!
..... மகாகவி பாரதியார்







                   தனிப் பாடல்கள்- சந்திரமதி 2/3

பெண்குலத்தின் வெற்றி யடி
பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி!
..... மகாகவி பாரதியார் 







                    தனிப் பாடல்கள்- சந்திரமதி 3/3

ஞான வொளி வீசுதடி
நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி! 
..... மகாகவி பாரதியார் 




No comments:

Post a Comment