மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, December 24, 2012

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்
12.12.2012 -- சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்.அதற்கு முந்திய தினமே மதுரை நகர் சுவர்களில் வண்ணமய போஸ்டர்களும் ,அவற்றின் மீது கற்பனைக்கு எட்டாத வாசகங்களும் கண்டேன் . ஆனால் இவ்வளவு வெறியை ரசிகர்கள் மூளை மீது திணித்ததன் பெரும்பங்கு மீடியாக்களையே சாரும் .
நானும் ரஜினி ரசிகன் தான்..எண்பது தொன்னூறுகளில் ரஜினி படம் ஒன்றுகூட மிஸ் பண்ணியதில்லை. மானாமதுரையில் இருந்தபோதுமனைவியை கேரியரிலும் குழந்தைகளை ஹேண்டு பாரிலும் வைத்துக்கொண்டு ரஜினி படம் பார்க்க சைக்கிளில் சிட்டாகப் பறந்த என் கதை சுவாரஸ்யமானவை . நினைவுகளில் நிரம்பிப் கிடப்பவை ஏன் .தில்லுமுல்லு படத்தை எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன் .
ஆனால் இப்ப ரசிகர்கள் பண்ணுவதெல்லாம் ஏனோ எனக்கு ரெம்ப ஓவராய் தெரியுது .

என்ன காரணம் தெரியல.நீங்களாவது சொல்லுங்க .

No comments:

Post a Comment