மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, February 12, 2019

பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. - Mahakaviமகாகவி பாரதியார்



Mahakavi Bharathiyar quote 


வில்லினை யெடடா!-கையில்
வில்லினை யெடடா!-அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி 
செய்திடடா!                                                (வில்)

வாடி நில்லாதே;-மனம்
வாடி நில்லாதே;-வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் 
சொல்லாதே.                                                (வில்)

ஒன்றுள துண்மை-என்றும்
ஒன்றுள துண்மை-அதைக்
கொன்றி டொணாது குறைத்த 
லொண்ணாது.                                              (வில்)

துன்பமு மில்லை-கொடுந்
துன்பமு மில்லை-அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் 
பில்லை.                                                         (வில்)
-------மகாகவி பாரதியார் 


No comments:

Post a Comment