உலகத் தாய் மொழி தினமும் (21.02.2023 )
தமிழர் தம் கடமையும்
சர்வதேச தாய் மொழி நாளின் வரலாறு
1947 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரமடைந்தன . அப்போது பாகிஸ்தான் நாடு மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் ( இன்றைய பங்களாதேஷ்) என இரண்டு பகுதிகாளாக இருந்தது . உருதுமொழியே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அன்றைய ஒன்றுபட்ட பாகிஸ்தான் அரசு அறிவித்த போது வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பான்மை கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அதைக் கடுமையாக எதிர்த்து போராடினர் . போராட்டம் கிழக்கு பாகிஸ்தான் முழுதும் பரவியது .21.02.1952 அன்று டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பிரமாண்டப் பேரணியை கலைக்க காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது .அதில் அப்துல் சலாம் , அப்துல் பர்கத் ,ரபீக் உதின் அஹமது, அப்துல் ஜபார், ஷபியூர் ரஹ்மான் என்ற ஐந்து மாணவர்கள் மரணமடைந்தனர் . தங்களது தாய் மொழியின் உரிமைக்காக இன்னுயிர் ஈந்த இந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய் மொழி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ(UNESCO) அமைப்பு விடுத்த அறைகூவல் படி உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 தேதியன்று சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
மகாபாரதத்தில் ஒரு கதை
உண்டு .குருசேத்திரப் போர் முடிவுக்கு வந்தது . கௌரவர்கள் கொல்லப்பட்டனர் .
வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஆட்சிபீடம் அமரப் போகிறார்கள் . கௌரவர்களின் தந்தை
திருதராஷ்டிரன் பார்வையற்றவர் . அப்போது அங்கு
அமர்ந்து இருக்கிறார். தனக்கு பிரியமான மகன்
துரியோதனனைக் கொன்ற பீமன் மீது அவருக்குள்ளே
கடுங்கோபம்; வெறுப்பு. திருதராஷ்டிரன் ஒரு
வரம் பெற்றவர் . அவர் யாரை வெறுப்புடன் ஆரக்கட்டி தழுவிக் கொள்கிறாரோ அவர் அப்பளமாக
நொறுங்கிப் போவார்..அதற்கு திருதராஷ்டிர
ஆலிங்கனம் என்று பெயர்.
உலக மகா நடிப்பை புரிந்துகொள்வோம்
இவர்கள் நடிப்பில் ஏமாறாமல் உஷாராக இருப்போம் :
இவை
போன்று தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் காட்டும்
கரிசனமும் “திருதராஷ்டிர ஆலிங்கனத்துக்கான”
முன்னோட்டமே என்பதை தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும். இவர்களது நடிப்பில் மயங்கி ஏமாந்து விடாமல் உஷாராக
இருப்போம் என ஒவ்வொரு தமிழரும் இந்த உலகத் தாய் மொழி தினத்தன்று சபதமேற்ப்போம்.