மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, February 20, 2019

போகின்ற பாரதத்தை போ போ போ என சபித்தல் -- மகாகவி பாரதியார்


போ போ போ என போகின்ற பாரதத்தைச் சபித்தல்

வலிமையற்ற தோளினாய் போ போ போ 
     
மார்பி லேஓ டுங்கினாய் போ போ போ 
பொலிவி லாமு கத்தினாய் போ போ போ 
     
பொறி யிழந்த விழியினாய் போ போ போ 
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ 
     
ஒளியி ழந்த மேனினாய் போ போ போ 
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ 
     
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

-----  மகாகவி பாரதியார்


Bharathiyar poetic quote 

இன்று பார தத்திடை நாய்போலே 
     
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ 
நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ 
     
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ 
சென்று போன பொய்யெலாம் மெய்யா கச் 
     
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ 
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக 
     
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

-----  மகாகவி பாரதியார்


Bharathiyar poetic quote 

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ 
      வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ 
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும் 
     
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ 
மாறு பட்ட வாதமே ஐந்நூறு 
     
வாயில் நீள ஓதுவாய் போ போ போ 
சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர் 
     
சிறியவீடு கட்டுவாய் போ போ போ
-----  மகாகவி பாரதியார்

Bharathiyar poetic quote 

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ 
     
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ 
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று 
     
நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ 
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே 
     
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ 
சோதி மிக்க மணியிலே காலத் தால் 
     
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ
-----  மகாகவி பாரதியார்



Bharathiyar poetic quote 

No comments:

Post a Comment