மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, February 24, 2019

வாழும் வழி எது தெரியுமா .?- மகாகவி பாரதியின் பதில்

வாழும் வழி எது தெரியுமா .?- மகாகவி பாரதியின் பதில் 
மகாகவி பாரதி தனது பாப்பா பாட்டில் " உண்மை தான் தெய்வம்"  என்பதை உணரவேண்டும் என்கிறான் . 

ஓதிடும் தெய்வங்கள் எல்லாம் பொய் . உண்மையே  தெய்வம்   என்று கீழ்கண்ட கவிதை வரிகளில் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும் 

"உண்ம்மையின் பேர் தெய்வம் என்போம் - மற்று 
ஓதிடும்  தெய்வங்கள் பொய்  எனக் கண்டோம் "

தான் கண்டு உணர்ந்தவற்றையே குழந்தைப் பாப்பாவிற்கும் மகாகவி  சொல்வதை இங்கு காணலாம் .

மனித குல வாழ்வில் துயரங்கள் கஷ்டங்கள் எல்லாம் வந்து செல்லக் கூடியவை ; தவிர்க்கமுடியாதவை .எனவே அவற்றை எதிகொள்ளும் துணிச்சலை வைரமுடையே  நெஞ்சே தரும் . எனவே குழந்தை பருவத்திலேயே வாழ்வின் எதார்த்தத்தை  அவர்களுக்கு புரிய வைக்கிறான் . 

வாழும் வழி எது தெரியுமா .உண்மையை தெய்வம் என்று உணர்வதும், எல்லாவற்றையும் எதிர்கொள்ள நெஞ்சை வலிமையாக வைத்திருப்பதும் தான் என்கிறான் பாரதி. 

Bharathiyar quote






No comments:

Post a Comment