மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, February 20, 2019

புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி- மகாகவி பாரதியார்


புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-1

ஆகாவென்று  ழுந்தது பார்  யுகப்புரட்சி! 
மாகாளி பராசக்தி உருசியாநாட் 
     
டினிற் கடைக்கண் வைத்தாள்,அங்கே 
ஆகாவென்று  ழுந்தது பார் யுகப்புரட்சி! 
     
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்! 
வாகான தோள்புடைத்தார் வானமரர்; 
     
பேய்களெலாம் வருந்திக் கண்ணீர் 
போகாமற் கண்புகைந்த மடிந்தனவாம்; 
     
வையகத்தீர், புதுமை காணீர்!1
-- மகாகவி பாரதியார்

Bharathiyar on New Russia - poetic quote 

புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-2

தருமம்  தன்னைத்  திரணம் எனக்
கருதிவிட்டான்  ஜார் மூடன்; 
இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் 
     
ஜாரெ னும்பே ரிசைந்த பாவி 
சரணின்றித் தவித்திட்டார்  நல்லோரும் 
     
சான்றோரும்; தருமம் தன்னைத் 
திரணம் எனக் கருதிவிட்டான் ஜார்மூடன்; 
     
பொய் சூது  தீமையெல்லாம் 
அரணியத்திற்  பாம்புகள்போல் மலிந்துவளர்ந் 
     
தோங்கினவே  அந்த நாட்டில்!
-- மகாகவி பாரதியார்
*திரணம் - துச்சம், துரும்பு

Bharathiyar on New Russia - poetic quote 


புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-3

உண்மை சொல்வோர்க் கெல்லாம் 
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு
உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை; 
     
பிணிகள்  பல வுண்டு; பொய்யைத் 
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க 
     
ளுண்டு;உண்மை சொல்வோர்க் கெல்லாம் 
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு; 
     
தூக்குண்டே இறப்ப துண்டு; 
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே 
     
ஆவிகெட முடிவ துண்டு.3
-- மகாகவி பாரதியார்


Bharathiyar on New Russia - poetic quote 
புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-4

இம் என்றால் சிறைவாசம்;
ஏன் என்றால்     வனவாசம்
இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால்
     
வனவாசம்,இவ்வா றங்கே 
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே 
     
அறமாகித் தீர்ந்த போதில், 
அம்மை மனங்கனிந்திட்டாள்; அடிபரவி 
     
உண்மை சொலும் அடியார்  தம்மை 
மும்மையிலும் காத்திடு நல்விழியாலே 
     
நோக்கினாள்; முடிந்தான் காலன்.
-- மகாகவி பாரதியார்


Bharathiyar on New Russia - poetic quote 

புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-5

அறங்கொன்று சதிகள் செய்த 
சுமடர் சட சடவென்று சரிந்திட்டார்
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் 
     
ஜாரரசன்;இவனைச் சூழ்ந்து 
சமயமுள படிக்கெல்லாம் பொய்வறி 
     
அறங்கொன்று சதிகள் செய்த 
சுமடர் சட சடவென்று சரிந்திட்டார், 
     
புயற்காற்றுச் சூறை தன்னில் 
திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் 
     
விறகான செய்தி போலே!
-- மகாகவி பாரதியார்
  *சுமடர் - அறிவில்லாதவன், கீழ்மகன்

Bharathiyar on New Russia - poetic quote 
புதிய ருஷியா -ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி-6

இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான் 
     
கிருதயுகம் எழுக மாதோ
குடிமக்கள்  சொன்னபடி  குடிவாழ்வு 
     
மேன்மையுறக்  குடிமை  நீதி 
கடியொன்றில் எழுந்ததுபார்  குடியரசென்று 
     
உலகறியக்  கூறி விட்டார்; 
அடிமைக்குத்  தளையில்லை  யாரும் இப்போது 
     
அடிமையில்லை அறிக  என்றார்; 
இடிபட்ட சுவர் போலே கலிவிழுந்தான் 
     
கிருதயுகம் எழுக மாதோ!
-- மகாகவி பாரதியார்

Bharathiyar on New Russia - poetic quote 


No comments:

Post a Comment