மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, June 28, 2020

செந்தமிழ் நாட்டின் பெருமையும், தமிழர்களின் வீரமும் - மகாகவி பாரதியார்

செந்தமிழ் நாட்டின் பெருமையும், தமிழர்களின் வீரமும் - மகாகவி பாரதியார் 

            செந்தமிழ் நாடு -1/5

செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே -எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
.வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு -நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு.

           












































           செந்தமிழ் நாடு-2/5

காவிரி தென்பெண்ணை பாலாறு -தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி -என
மேவி ஆறு பலவோடத் -திரு
மேனி செழித்த தமிழ்நாடு.(செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே -நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு -செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே -அவை
யாவும் படைத்த தமிழ்நாடு




செந்தமிழ் நாடு--3/5


நீலத் திரைக்கடல் ஓ ரத்திலே -நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு


கல்வி சிறந்த தமிழ்நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு -நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.


செந்தமிழ் நாடு--4/5

வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் -மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.

சிங்களம் புட்பகம் சாவக -மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி -அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் -நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.






செந்தமிழ் நாடு--5/5           

விண்ணை யிடிக்கும் தலையிமயம் -எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் -சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார் -தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

சீன மிசிரம் யவனரகம் -இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் -கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் -மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.




No comments:

Post a Comment