மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, June 11, 2020

மனமே வீணே உழலுதல் வேண்டா - மகாகவி பாரதி


மனமே எனை வாழ்வித்திடுவாய் !
வீணே உழலுதல் வேண்டா !!

யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய்,யார்க்கும் இனியனாய்,
வாழ்ந்திட விரும்பினேன்;மனமே! நீயிதை
ஆழ்ந்து கருதி ஆய்ந் தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறி நான் சித்திபெற் றிடவே.
நின்னால்  இயன்ற துணைபுரி வாயேல்

              "விநாயகர் நான்குமணிமாலை"யில்
                         மகாகவி பாரதியார்

Mahakavi Bharathiyar poems
                      

No comments:

Post a Comment