மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, June 07, 2020

மகாகவி பாரதியார் வசனக் கவிதை - காற்று


          காற்றே வா
காற்றே வா. மெதுவாக வா.
ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே.
 காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே.
அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே
பார்த்தாயா? இதோ,தள்ளிவிட்டாய்,
 புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்.
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்.
வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி
வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்
Mahakavi Bharathiyar Vasanak Kavithai -Kaatru 


No comments:

Post a Comment