தனிப் பாடல்கள்- மழை 1/3
- மகாகவி பாரதியார்
| ||
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட பக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம் சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு தக்கை யடிக்குது காற்று-தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட |
தனிப் பாடல்கள்- மழை 2/3
- மகாகவி பாரதியார்
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!
தனிப் பாடல்கள்- மழை 3 /3
- மகாகவி பாரதியார்
அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
No comments:
Post a Comment